RSS

17/09/2014

மகிழ்ச்சியான தருணம்!!!

எனக்குமா!!!!! விருதா!!!!! நம்பமுடியவில்லை, இல்லை, ல்லை
இதுதான் எனக்கு கிடைத்த முதல் விருது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனது அனுபவ பகிர்வை, பார்த்ததை, கேட்டதை, ருசித்ததை இனிய தருணங்களை பகிர்ந்து வருகிறேன். அதை இன்னும் மேம்படுத்தி தளத்தில் எழுதுவதற்கு உந்துசக்தியாக இது அமைந்திருக்கு என்றால் அது மிகையில்லை.

இவ்விருதினை கொடுத்த சகோ.பாண்டியன் (அரும்புகள் மலரட்டும்) தோழி இளமதி (இளையநிலா) இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இவ்விருதினை பகிரவேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். 
நான் இவ்விருதினை.....

1. மேனகா சத்யா.
இவர் பலவிதமான சமையல் குறிப்புகளை நிறைய பதிவுகளாக்கி வருகிறார்.

2.உமையாள் காயத்ரி
இவர் ஒரு பன்முக கலைஞர் என்றே சொல்லலாம். ஓவியம், கவிதை, கிருஷ்ணகானம், சமையல்குறிப்புகள் என எழுதிவருகிறார்.

3.ஆசியா ஓமர்
இவரின் தளத்தில்  எளிமையாக செய்யக்கூடிய சமையல் குறிப்புகள் நிறையவே இருக்கின்றன.

4. மகி
இவரின் தளத்தில் சமையல்குறிப்பு ,தோட்டம் ,கைவேலை சம்பந்தமான பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

 5.சங்கீதா செந்தில்
இவரும் சமையல்குறிப்பு, கைவேலை என பதிவுகள் பகிரும் பதிவர். 

இவ் ஐவரோடு, நான் பகிர நினைப்பவர்கள் எல்லோருக்குமே இவ்விருது ஏற்கனவே பகிர்ந்தளித்தாயிற்று. அதனால் என் வலைப்பதிவை பின்தொடரும்  அனைத்து அன்பு உள்ளங்களுடனும் இவ்விருதினை பகிர்ந்துகொள்கிறேன். நன்றிகள்.
 *******************************************************


 
Copyright பிரியசகி