RSS

27/02/2014

வருமா???வராதா!!!

மார்கழியில் வந்ததோடு சரி. இனிமேலும் வரக்கூடும் என்றோர் மனமும், வராது என்றொரு மனமும் முரண்படுகின்றன. ஆனாலும் மாற்றங்கள் மாறத்தான் செய்கின்றன.

இப்படி இருந்ததை............
  இப்படியாக சில வேலை செய்து ................
  மாற்றியமைத்த பின் .........
 2013 டிசம்பரில் வந்தபோது ...........
ஸ்னோ கொட்டும்போது வாசலில் எக்ஸ்ராவா கூரையிலிருந்தும்   விழுவதால், ((இங்கு ஓடுகளில் ஸ்னோ தங்காமல் இருப்பதற்கு, வழுக்கும் தன்மையாக  ஓடுகள் செய்யப்பட்டிருக்கும். ஸ்னோ மேலே இருந்தால் கூரை உடைந்துவிடும் அபாயம் இருக்கு.))கராஜிலிருந்து காரை அதிகாலையில் எடுப்பது சிரமமாக இருக்கும். அதனால் கடந்த வருடம் நவம்பரில் வீட்டின் முன்னால் சின்னதாக  கூரை ஒன்று  போட்டோம்.இல்லாவிட்டால் நிறைய அள்ளிக்கொட்டவேண்டும்.நடைபாதை கண்டிப்பாக துப்பரவு செய்யவேண்டும்.யாராவது போகும்போது வழுக்கி விழுந்தால் நாம்தான் பணம் கட்டவேண்டும் . நாமும் இதற்கு விதிவிலக்கல்ல.விழுவதற்கு. இது போட்டதற்காக ஒரே ஒருதரம்(டிசம்பரில்) கொட்டியதோடு சரி. இவ்வருடம் இன்னமும் கொட்டவில்லை.!!!??? ஆனாலும் குளிர் குறையவேயில்லை 
 
************************************************************ 
வருமா வராதா
வரும் ஆனா வராது 
வந்தால் கஷ்டம்
வராவிட்டால் சந்தோஷம்
வந்திட்டால் வாடிவிடும்   
வராவிட்டால் பூத்திடும்..
இங்கு வெயிலைக்கண்டவுடன் மரங்கள் சில இலைகள் வைத்து மொட்டுடன் பூக்க ஆயத்தமாகின்றன. அவைகளை ஒவ்வொரு நாளும் பார்ப்பது வேலையாகிவிட்டது. 
அவைகளை பார்க்கும்போது இவ்வரிகள் மனதில் எழுந்தது. 
இன்னும் குளிர் காலம் முடியவில்லை.
***********************************************************



          
         

 
 
Copyright பிரியசகி