RSS

02/10/2015

பசுமை நினைவுகள்....

நான்  பல தடவை ஊருக்கும், சில நாடுகளுக்கும் பயணப்பட்டிருக்கேன். ஆனா இம்முறை ஊர்பயணம் (srilanka) மறக்கமுடியாததொன்றாகிவிட்டது. என்ன தான் Airbus A380 செல்ல ஆசைப்பட்டு, அதில் சென்று வந்தாலும், புகையிரதத்தில் செல்லுமாப்போல வராது. அதில் வரும் சந்தோஷம், மகிழ்ச்சிக்கு ஈடேது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நான் சென்ற புகைவண்டி பிரயாணம் மறக்கமுடியாது. பல நினைவுகள் இந்த இரயில் பயணத்தின்போது ஞாபகத்துக்கு வரத்தொடங்கின.  யாழ்ப்பாணத்துக்கு நீண்ட காலமாக புகையிரதம் ஓடவில்லை. பிரச்சனை,சண்டை காரணமா நடைபெற்றுக் கொண்டிருந்த சேவையை 1990 ம் ஆண்டு நிறுத்திவிட்டது.
தற்போதுதான் மீண்டும் சேவைகள் நடைபெறுது. எனது சின்ன வயது காலத்தில் "யாழ்தேவி" என்ற பெயரில் புகையிரதம் ஒன்று யாழ்-கொழும்புக்கிடையில் ஓடியது.  மிகவும் பிரபல்யமானது. சிறுவயதில் ஆசையுடன் கொழும்புக்கு சென்று வந்த புகையிரதம்.
இப்புகையிரதம் (யாழ்தேவி) பல இன்பதுன்ப நிகழ்வுகளோடு யாழ்ப்பாண மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. யாழ்ப்பாணத்துக்கும்-கொழும்புக்கும் இடையே சென்று வந்த இப்புகைவண்டி ஒரு உறவாகிவிட்டிருந்தது. யாழிலிருந்து கொழும்பு சென்று வேலைப்பார்ப்பவர்கள், இதில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பி, பின் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்வார்கள். அத்தனை தூரம் பயணப்பட வசதியாக இவ்வண்டி இருந்தது. நிறைய அண்ணா,அக்காமாரின் இதயத்தை இடம் மாற்றி, இன்ப நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது இவ்யாழ்தேவி.
என்னதான் இச்சேவை நடைபெற்றாலும் அக்காலம்போல வரவே வராது. அந்நினைவை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனா திரும்ப வராதே...ம்.ம்ம்
ஆனால் எனக்கு யாழ்தேவியில் செல்லக் கொடுத்து வைக்கவில்லை. நான் intercity எக்ஸ்பிரஸ் ல்தான் ஊருக்குச்சென்றேன். ப்ளைட் ல் என்னதான் வசதிகள் இருந்தாலும், அதில் ஒன்று தூக்கம், அல்லது அதில் இருக்கும் கேம்ஸ், அல்லது படங்கள் பார்க்க‌, பாட்டுக்கள் கேட்கவே முடியும். வெளியில் பார்த்து ரசிக்க வெண்மேகங்கள்தான். அதையும் எவ்வளவுதான் ரசிக்கமுடியும்.

                   நான் சென்ற அதிவிரைவுவேக புகைவண்டி.
ஆனால் புகைவண்டியில் அப்படியில்லை. அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. பகல் நேர பயணமானால் ஜன்னல் பக்கம் இருந்து பார்க்கும்போது எங்களை கடந்து செல்லும் இயற்கையழகு, மனிதர்கள், மிருகங்கள், வீதிகள், வாகனங்கள் இப்படி ரசிக்க நிறைய்ய்ய்ய இருக்கும். நேரம் செல்வதே தெரியாது. அப்படிப்பட்ட பயணமாக   நீண்ண்ண்டகாலத்துக்கு பின் கிடைத்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்பயணம்.








                       கிளிநொச்சி(மாவட்டம்) எனும் ஊர்.

                                  ஆனையிறவு உப்பளம்



 சாவகச்சேரி எனும் ஊரில் இருக்கும் வைத்தியசாலை

முதன் முதல் யாழ்தேவி புகைவண்டி பயணத்தின் போது என் தம்பியுடன் ஜன்னலோர இருக்கைக்கு சண்டை பிடித்ததும், எங்கள் சண்டையை பயன்படுத்தி மாமா மகன் அவ் இருக்கையில் ஓடிபோய் இருந்து கொண்டதும், பின்னர் நானும் தம்பியும் சண்டையை மறந்து அவனை அதிலிருந்து ஒற்றுமையா அப்புறப்படுத்தி, "நீ இரு, இல்லையில்லை நீ இரு" என்று விட்டுக்கொடுத்து, பின்னர் இருவரும் மாறிமாறி இருந்து போனதும் ஞாபகத்தில் வந்து மனதை நெகிழச்செய்தது. இப்படி என் பயணம் நீண்ட காலத்தின் பின், யாழ்தேவியில் செல்லாவிட்டாலும், பல பழைய நினைவுகளை ஏற்படுத்திய ரயில் பயணமாக, மறக்கமுடியாமலும் அமைந்துவிட்டது...!!!!
இதுதான் எங்க ஊர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம்.




பின்குறிப்பு.>ஆனாலும் இடையில் ஒருநாள் சுன்னாகம் எனும் ஊரிலிருந்து  யாழ்தேவியில் ஏறி(டிக்கெட் எடுத்துதான்) யாழ்ப்பாணத்துக்கு சென்று வந்தேன். விருப்பத்தை கொஞ்ச தூரமெனினும் யாழ்தேவியில் பயணம் செய்து நிறைவேத்தியாச்சு...!!

15 comments:

  1. வணக்கம் சகோ பழமையான நினைவலைகளில் நானும் மூழ்கி விட்டேன் உண்மையே புகைவண்டி பயணம் அரியதொரு விசயமே அழகான புகைப்படங்கள் வாழ்த்துகள்
    சகோ நான் போட்டிக்கு 7 பதிவுகள் அனுப்பி இருக்கிறேன் சிலவற்றை தாங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன் நேரம் இருக்கும் பொழுது வருக...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா ஜி! உங்க கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றிகள். மறக்கமுடியாத அனுபவம்.!!! எல்லாம் அனேகமாக படித்து கருத்தும் சொல்லியிருக்கேன் என நினைக்கிறேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!!

      Delete
  2. வணக்கம்
    குருதியில் குளித்த புனி எமது தேசம் நீண்ட நாட்களுக்கு பின்பு பார்த்தபோது மகிழ்ச்சியடைந்தேன் புகைப்படங்கள் வாயில்
    எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் காண வாருங்கள்
    Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மிக்க மிக்ழ்ச்சி வரவு கண்டு. கண்டிப்பாக வருகிறேன். வருகைக்கும்,கருத்தளித்தமைக்கும் நன்றிகள்.

      Delete
  3. நெஞ்சு நிறைக்கின்றது பிரியா காட்சிகள் அத்தனையும்!..:)
    நினைவுகள் பின்னோட நெடுமூச்சொன்று மட்டும்
    என்னிடமிருந்து...:’(

    அருமை எனும் சோலைவிட வேறிருந்தால் அதனையே இங்கு சொல்வேன்!

    சுன்னாகத்தில் ஏறி.....................
    என் நிணைவுகளும் உங்களுடன் ஏறிவிட்டதே..
    யாழ்தேவியில் நானும்......

    ReplyDelete
    Replies
    1. ஆஹா !! வாங்க பாவலரே. நேரம் கிடைத்ததே வர. மகிழ்ச்சி. அந்த ஊருக்கு போனதும் தற்செயல்தான். உடனடிஆக ஞாபகம் வந்தது பக்கத்து ஊருதான். ரயில் நிலையம் பார்த்ததும்,போய் இப்போ ரயில் இருக்கா என பார்த்து,டிக்கெட் எடுத்து போயாச்சு,வந்தாச்சு. சிலவற்றை செய்யாமல் போய்விட்டேனே என இங்கு வந்து நினைத்து கவலைதான் எனக்கும்.பரவாயில்லை என மனதை தேற்றிக்கொள்கிறேன். நன்றி கவிஞரே.

      Delete
  4. ப்ரியா,

    உண்மையச் சொல்லட்டுமா ! அந்த ஏர்பஸ்ஸில் போக கொஞ்சம் பயம் :)

    புகைரதம், யாழ்தேவி பேரெல்லாம் சூப்பரா இருக்கு. இதயம் இடம்மாறியது பற்றி நினைவு வைத்து எழுதியது அழகு. எனக்கு புகைவண்டி அனுபவம் எல்லாம் கிடையாது. சொந்தம் முழுவதும் பக்கத்து பக்கத்து வீட்டிலேயே, அல்லது பக்கத்து தெருவில், அதையும் தாண்டிப்போனால் பக்கத்து ஊர் அப்படித்தான்.

    உங்க ஊர் ரயில் நீட்'டா சுத்தமா இருக்கே ! உங்க ஊர் பக்கம் எல்லாம் பசுமையோ பசுமை. வீடுகூட வித்தியாசமா அழகா இருக்கு. கடைசியில விருப்பத்தை நிறைவேத்தியாச்சு போல ! இப்போதான் எனக்கும் நிம்மதியாச்சு :)

    ReplyDelete
    Replies
    1. அதையேன் கேட்கிறீங்க சித்ரா. என்னவருக்கு இந்த ப்ளாட்ல் போக வேணுமென நெடுநாள் ஆசை. சும்மாவே எமிரேட்ஸ் ல்தான் போவார். தைமாதமே புக் செய்தாச்சு,
      எங்க ஊர் எப்பவுமே பசுமைதான். அதுவும் ரயிலில் போகும்போது பார்க்க ஆசையாக இருக்கும்.ஒருமாதிரி அனுபவித்துவிட்டேன்.
      உங்க நிம்மதி எனக்கு மகிழ்ச்சி சித்ரா. நன்றீயும் அன்பும் உங்களூக்கு.

      Delete
  5. பிரியசகி மலரும் நினைவுகளை நீங்கள் பகிர்ந்த விதம் மிக அருமை. புகைப்படங்கள் எல்லாம் அற்புதம், எனது 3 பதிவுகளை நீங்கள் பார்க்க வில்லை. எனவே பார்வையிட வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அக்கா உங்க வருகைக்கும்,கருத்துக்களுக்கும்.

      Delete
  6. அழகான ரயில் பயணம் . என் வீட்டிலிருந்து 5 நிமிடத்தில் ரயில் நிலையம் அங்கு வரும் ஒரே ரயிலையும் மீட்டர் கேஜ் மாற்ற நிறுத்தி 5 வருடம் ஆயிடுச்சு இன்னும் வேலையும் முடியலை ரயிலும் வரலை. வந்தவுடன் கண்டிப்பா போகனும். இன்னும் அந்த ரயிலில் மட்டும் ஒரு முறை கூட போனதில்லை நான். நினைவில் நின்ற பயணம் உங்களுக்கு .

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு நீண்டகாலமா இல்லாமல்தான் இருந்து இப்ப ஏதோ ஒருமாதிரி வேலைகள் முடிந்து நடைபெறுகிறது.
      நன்றி அபிநயா.

      Delete
  7. யாழ் போன நினைவுகள்,மீண்ட நினைவுகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்க முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  8. பசுமை நினைவுகள் அருமை படங்கள் மிக அழகு.
    தம்பியும் நீங்களும், சென்ற ரயில் பயணநினைவுகள் மிக அருமை.

    ReplyDelete

 
Copyright பிரியசகி